பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி மீது சுஷாந்த் குடும்பத்தினரால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சுஷாந்துக்கு போதை மருந்து தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சில வார சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்தநிலையில் நாளை (ஜன-21) சுஷாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. தற்போதே டிவிட்டரில் சுஷாந்த் பற்றிய ஹேஷ்டேக்குள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதையடுத்து சுஷாந்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக சாலையோர பூக்கடையில் பூங்கொத்து வாங்குவதற்காக காரில் வந்து இறங்கினார் ரியா. அவர் மாஸ்க் அணிந்திருந்தாலும் அவரை கண்டுகொண்ட சில ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபடியே வந்தனர். அவர்களிடம் தன்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் விதமாக கையெடுத்து கும்பிட்ட ரியா சக்கரபோர்த்தி, தான் வந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றார்.




