பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ரிச்சா சட்டா. அதன் பிறகு மசான், சர்பிஜித், வோர்ட்ஸ் வித் காட், 3 ஸ்டோரிஸ், கப்ராட், பங்கா உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் பயோபிக் படத்தில் நடித்தார்.
இவர் நடித்து தற்போது வெளிவரவிருக்கும் படம் மேடம் சீப் மினிஸ்டர். சுபாஷ் கபூர் இயக்கி உள்ள இந்த படத்தில் ரிச்சா சட்டாவுடன் மனவ் கவ்ல், அக்ஷய் ஓபராய், நிகில் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறர்கள். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நாளை படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்வதாகவும், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாவும் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரியானா மாநில பீம் சேனா அமைப்பின் கைதல் மாவட்ட தலைவர் அசோக் தானியாக என்பவர் டிரம்ப் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ரிச்சா சட்டா, படத்தின் இயக்குனர், மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




