போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், நடிகர் ஹிரித்திக் ரோஷனும் ஒரு காலத்தில் நெருங்கி பழகியதுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கங்கனாவே கூறியுள்ளார். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கிடையே தன்னை பின்தொடரும் மர்மநபர் யாரோ, தனது இ-மெயிலில் இருந்து யாரோ ஆள்மாறாட்டம் செய்து கங்கனாவுடன் தான் தொடர்பில் இருந்தது போல செய்தி அனுப்பியதாக 2016ல் போலீஸில் புகார் அளித்தார் ஹிரித்திக் ரோஷன்..
ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதால், இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸில் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம், மும்பை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள க்ரைம் பிரஞ்ச் அலுவலக பிரிவுக்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன், இந்த புகார் குறித்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.