ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், நடிகர் ஹிரித்திக் ரோஷனும் ஒரு காலத்தில் நெருங்கி பழகியதுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கங்கனாவே கூறியுள்ளார். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கிடையே தன்னை பின்தொடரும் மர்மநபர் யாரோ, தனது இ-மெயிலில் இருந்து யாரோ ஆள்மாறாட்டம் செய்து கங்கனாவுடன் தான் தொடர்பில் இருந்தது போல செய்தி அனுப்பியதாக 2016ல் போலீஸில் புகார் அளித்தார் ஹிரித்திக் ரோஷன்..
ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதால், இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸில் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம், மும்பை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள க்ரைம் பிரஞ்ச் அலுவலக பிரிவுக்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன், இந்த புகார் குறித்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.