ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்தி முழுக்க பிரபலமான தொடர் மகாபாரதம். இந்த தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் சதீஷ் கவுல். அதன் பிறகு விக்ரம் அவுர் பேட்டால் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 'பியார் தோ ஹோனா ஹை தா' மற்றும் 'ஆன்ட்டி நம்பர் ஒன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
74 வயதான சதீஷ் கவுலுக்கு கடந்த 8ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான் ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.