பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்தி முழுக்க பிரபலமான தொடர் மகாபாரதம். இந்த தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் சதீஷ் கவுல். அதன் பிறகு விக்ரம் அவுர் பேட்டால் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 'பியார் தோ ஹோனா ஹை தா' மற்றும் 'ஆன்ட்டி நம்பர் ஒன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
74 வயதான சதீஷ் கவுலுக்கு கடந்த 8ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான் ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




