இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் மகாபாரதம் புகழ் சதீஷ் கவுல் கொரோனாவுக்கு பலியானார். இதை தொடர்ந்து பாலிவுட் சின்னத்திரை நடிகைகள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பிறகு தான் அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டனர். தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.