தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஷாருக்கான், சல்மான்கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே நடிக்கும் படம் பதான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். கடந்த ஆண்டே முடிந்திருக்க வேண்டிய இந்த படத்தின் பணிகள் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக முடியவில்லை.
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் அரசு விதிமுறைகளின்படி படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் பதான் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.