இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த வருட கொரோனா அலை ஏற்பட்ட போது பல திரையுலகப் பிரபலங்கள் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஹிந்தி நடிகர் சல்மான் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து இந்திய மேற்கு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திவாரி கூறுகையில், “சினிமா தொழிலாளர்கள் பலரது பெயரை சல்மான் கானிடம் வழங்கியுள்ளோம். சல்மான் கான் 25,000 தொழிலளார்களுக்கு தலா 1500 ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மூத்த தொழிலளார்கள் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளோம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க அவர்கள் சம்மதித்துள்ளார்கள். தொழிலளார்களின் வங்கிக் கணக்குகளை உறுதி செய்தபின் நேரடியாக அவர்களது கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுவார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.