தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கொரோனா தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி லேசான பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த தனிமையை எதிர்கொள்ளவும் ஒரு தனி தைரியம் வேண்டும். ஒரு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது என்பது பழக்கமில்லாதவர்களுக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார். பின் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான குலுமணாலி சென்று குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.
“கோவிட் நேரத்தில் தனிமையாக இருந்தது தான் அதிக சவாலானது. இன்று மணாலியில் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பது அன்பானது,” என நேற்று பதிவிட்டுள்ளார்.