லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி. இருவரும் காதலர்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம். 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் வெளியில் வரக் கூடாது.
ஆனால், காதல் ஜோடிகளான டைகர், திஷா இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றியிருக்கிறார்கள். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது சரியான காரணத்தைக் கூறவில்லையாம். அதனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மாஸ்க் போடாமல் வெளியில் வந்த போது அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.