நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார். அந்தாஸ், தேவதாஸ், மொகலே ஆஸம், ஆஸாத் உள்பட 60கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 93 வயதான திலீப் குமாருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் மனைவி சைரா பானு கூறியிருப்பதாவது: அவருக்கு திடீரென்று நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடடினாக மருத்துவமனையில் அனுமதித்தோம். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை.
அதனால் தான் அவரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். மூச்சு திணறலுக்கான காரணத்தை கண்டறிய டாக்டர்கள் பலவித சோதனைகளை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறது. என்றார்.