தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மொழி தாண்டி நேசிக்கப்படும் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் திடீரென காலமானார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இவரது இரண்டு மகன்களில் ஒருவரான பபில் கான், லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைகழகத்தில் படித்து வந்தார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு மும்பையிலேயே தங்கிய அவருக்கு நெட்பிளிக்ஸ் உருவாக்கும் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊரடங்கு காரணமாக லண்டனுக்கு செல்லாமல் இருந்த பபில் கான் தற்போது வெப்சீரிஸில் பிசியாகிவிட்டார். தனது தந்தையை பின்பற்றி நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தனது படிப்புக்கு பாதியிலே குட்பை சொல்வதாக அறிவித்துள்ள இவர், தனது லண்டன் மாணவ நண்பர்களிடம் இந்த தகவலை கூறி பிரியா விடை பெற்றுள்ளார்.