இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கிரிக்கெட் பற்றியோ, கிரிக்கெட் வீரர்கள் பற்றியோ படம் எடுத்தால் மினிமம் கியாரண்டி என்கிற நிலை ஹிந்தி படங்களுக்கு இப்போது இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாகி உள்ள 83 என்ற படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. பல ஆண்டுகளாக யூக செய்தியாக உலவிக் கொண்டிருந்த இதனை கங்குலி இப்போது உறுதி செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் "எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார்கள். இப்போது அதற்கு அனுமதி அளித்திருக்கிறேன். அது ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்பதை படம் எடுப்பவர்கள் அறிவிப்பது தான் முறையானது. அதற்கு சில நாட்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் தயாராகி வருகிறார் என்றும், 250 கோடி பட்ஜெட்டில் இப்பட தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.