டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முடிவுக்கு வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது படங்களை இன்று திரையிட ஏற்பாடுகளை செய்து வந்தனர். அந்த வகையில் கன்னடத்தில் சுதீப் நடித்த கோட்டிகோபா-3 என்கிற படமும் இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்ஸியருக்குமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்க்கப்படாததால் கோட்டிகோபா-3 சொன்னபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் ஆர்வத்துடன் படம் பார்க்க குவிந்திருந்த சுதீப்பின் ரசிகர்கள் இதனால் சோர்வடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, பிரச்சினைகள் அனைத்தும் இன்று செட்டில் செய்யப்பட்டு நாளை படம் வெளியாகும் என்றும் காலை 6 மணி காட்சி முதல் ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் ஒரு ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.