சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முடிவுக்கு வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது படங்களை இன்று திரையிட ஏற்பாடுகளை செய்து வந்தனர். அந்த வகையில் கன்னடத்தில் சுதீப் நடித்த கோட்டிகோபா-3 என்கிற படமும் இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்ஸியருக்குமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்க்கப்படாததால் கோட்டிகோபா-3 சொன்னபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் ஆர்வத்துடன் படம் பார்க்க குவிந்திருந்த சுதீப்பின் ரசிகர்கள் இதனால் சோர்வடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, பிரச்சினைகள் அனைத்தும் இன்று செட்டில் செய்யப்பட்டு நாளை படம் வெளியாகும் என்றும் காலை 6 மணி காட்சி முதல் ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் ஒரு ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.