மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் 'அரசன்'. வட சென்னை கதைக்கள பின்னணியில் உருவாகும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ ஷூட் முடிவடைந்துள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதன் புரோமோ வீடியோ வருகின்ற அக்டோபர் 16ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கிச்சா சுதீப், உபேந்திரா, ராணா டகுபதி போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கிச்சா சுதீப் தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சுதீப்பின் கன்னட படத்தை தாணு தயாரித்துள்ளார். அந்தவகையில் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளதால் அரசன் படத்தில் சுதீப் நடிக்கலாம் என்கிறார்கள்.