ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை தங்களது பிறந்த நாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான், தான் நடித்து பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ள குருப் என்கிற படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் தனது இன்னொரு படமான ஹே ஷினாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி விடுத்துள்ள மரம் நடும் சவாலை ஏற்று அங்கே மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரச்சாரத்தை ரசிகர்களிடம் மீண்டும் துவக்கியுள்ளார்.
எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய குருப் என்கிற கொலைகாரனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.