பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
பிரபல மலையாள பாடலாசிரியர் பிச்சு திருமலா இன்று(நவ., 26) காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பிச்சு திருமலா கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் நாட்களை நகர்த்தி வந்தார்.
1972ல் பஜகோவிந்தம் என்கிற மலையாள படத்தின் மூலம் பாடலாசிரியாக நுழைந்த இவர் சுமார் நானூறு படங்களில் பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இரண்டுமுறை கேரளா அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரே படமான யோதாவில் இவர் பாடல் எழுதியுள்ளார். மேலும் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது இவர் தான்.