படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சமீபத்தில் பெய்த கன மழை ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 30 பேருக்கு மேல் உயிர்பலி ஆகியிருக்கிறார்கள்.
ஆந்திர மாநில அரசு மக்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. தெலுங்கு ஹீரோக்கள் வெள்ள நிவாரண உதவிகளை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாவும் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்கள் சக்திகேற்ப நிவாரண தொகையை அறிவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகள் வழங்கிய ஹீரோக்கள் ஆந்திர மக்களின் நிலை கண்டு மனம் நெகிழ்வதாகவும் இந்த நேரத்தில் அரசுக்கு அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.