நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
மலையாள திரையுலகின் பழம்பெரும் மூத்த நடிகரான ஜிகே பிள்ளை இன்று(டிச., 31) காலமானார் அவருக்கு வயது 97. கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இவரது மனைவியும் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். சினிமாவில் நுழைவதற்கு முன் ராணுவத்திலும் கப்பற்படையிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
மலையாளத்தில் 1957ல் சிநேகசீமா என்கிற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் இதுவரை சுமார் 325 படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மலையாளத்தில் நடித்த தச்சோளி அம்பு என்கிற படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் ஜிகே பிள்ளை.
பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பெயர் பெற்ற ஜிகே பிள்ளை தொலைக்காட்சியில் கடமட்டத்து கத்தனார் என்கிற தொடரில் கர்னல் ஜெகநாத வர்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ரொம்பவே நெருக்கமான ஒருவராக மாறினார்.