வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக பிரபலமாகி இப்போது தமிழ், தெலுங்கு படங்களிலும் அசத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிகம் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள பர்தா படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த பட புரொமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛தில்லு ஸ்கொயர்' படத்தில் வழக்கத்திற்கு மீறிய கவர்ச்சியாக நடித்தது பற்றி பேசி உள்ளார்.
அதில், ‛‛தில்லு ஸ்கொயர் படத்தில் நடித்தபோது எனக்கே சங்கடமாகத் தான் இருந்தது. அப்படியான வேடங்களை தவறு என கூறவில்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரம் என்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது. அதில் வசதியில்லாத ஆடைகளை அணிந்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கதைக்கு தேவை என்பதால் நடிக்க வேண்டியதாயிற்று. அந்த படம் முடியும் வரை ஒருவித பதட்டத்துடனேயே நடித்தேன். படம் வெளியான பின் அதற்காக எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டேன். ரசிகர்களும் என்னை வெறுத்தனர். இனி தில்லு ஸ்கொயர் மாதிரியான படங்களில் என்னை நடிக்க சொன்னால் நிச்சயம் நடிக்க மாட்டேன்'' என்றார் அனுபமா.