ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் குரூப் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் என்கிற படம் வரும் ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை துல்கர் சல்மானின் சொந்த நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து பரவிவரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதை குறிப்பிட்டுள்ள துல்கர் சல்மான் உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமூக நோக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், இந்த சமயத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என்று தள்ளி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்