பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, 84 நாள் சிறைக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கடத்தல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி பைஜு புவலோசை கொலை செய்ய திலீப் முயற்சித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திலீபின் வழக்கறிஞர் கொரோனா காலம் என்பதால் இந்த வழக்கில் திலீபை கைது செய்யக்கூடாது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். வழக்கு விசாரணையை வருகிற 14ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம் அதுவரை திலீபை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதோடு, முன்ஜாமின் குறித்த போலீசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.