படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த 2016ல் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்த திலீப்பிற்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித குடைச்சலும் கொடுக்காமல் அந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடந்தது.
இந்தநிலையில் திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் கேரள போலீசார். இதையடுத்து திலீப் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்தார். இந்த மனுவை வெள்ளிகிழமை (இன்று) விசாரிக்கும் வரை திலீப்பை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
இதற்கிடையே ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்ற போலீசார் திலீப்பின் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் காம்பவுண்ட் சுவரேறி குதித்து திலீப்பின் வீட்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் காத்திருந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக திலீப்பின் காதுகளுக்கு சென்றதும் சிறிது நேரத்தில் திலீப்பின் உறவினர் ஒருவர் வந்து போலீசார் சோதனை செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து விட்டாராம்.