இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை கடத்தல் வழக்கு முடிவுக்கு வர இருந்த நேரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னணி நடிகர் திலீப் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து திலீப் மீது புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 12 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. என்றாலும் 12 சாட்சிகளில் எட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கலாம் என்று அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. திலீப்பின் உறவினர்களின் செல்போன அழைப்புகளை பரிசோதிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.