பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மலையாளம் என பிசியாக இருந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் மூன்று மாத காலம் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக திலீப் மீது மீண்டும் வேறு ஒரு வழக்கு பதியப்பட்டு அதிலும் திலீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் திலீப் முதலில் தன் மீது பதியப்பட்ட நடிகை கடத்தல் வழக்கில் கிட்டத்தட்ட முழு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த விசாரணைகள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக இருக்கிறது.. எனவே மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அந்த முதல் வழக்கில் மேற்கொண்டு புதிய சாட்சிகளிடம் விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம் அதே சமயம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அந்த வழக்கு விசாரணை முழுவதையும் முடிக்க வேண்டுமென போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.