படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். பிரேம் நசீரின் சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் புளிமூடு ஆகும். சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்த பிறகு இந்த ஊரில் பிரேம் நசீர் சொந்த வீடு கட்டி, அதற்கு லைலா காட்டேஜ் என்று பெயர் சூட்டி, அங்கு 30 ஆண்டுகள் வரை தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார்.
பின்னர் இந்த வீட்டை அவரது மகள் ரீத்தாவுக்கு கொடுத்தார். தற்போது ரீத்தா தனது மகளுக்கு கொடுத்தார். ஆனால் தற்போது இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால் இதனை ரீத்தாவின் குடும்பத்தினர் விற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீட்டை கேரள அரசே வாங்கி பிரேம் நசீரின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 60 வருடங்களுக்கு பிறகும் இந்த வீடு சிறிதும் சேதமில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேம் நசீர், 520க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்ததற்காகவும், ஒரே ஹீரோயினுக்கு (ஷீலா) ஜோடியாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததற்காகவும் இரண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.