தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பஹத் பாசில் நடித்த அன்னயும் ரசூலும், துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் ரவி. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாசின் கணவர். கம்மட்டிப்பாடம் படத்தை முடித்ததும் மீண்டும் ஒளிப்பதிவாளராக மாறி தனது மனைவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்த மூத்தோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
அதை தொடர்ந்து நிவின்பாலி நடிக்கும் 'துறமுகம்' (துறைமுகம்) என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால், இளம் நடிகர் ஆசிப் அலியை வைத்து குட்டாவும் சிக்ஷையும் என்கிற போலீஸ் கதையை இயக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறிமாறி நடைபெற்று முடிந்து, தற்போது இரண்டு படங்களுமே ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருப்பதுதான் ஆச்சர்யம். குட்டாவும் சிக்ஷையும் மே-27ஆம் தேதியும், துறமுகம் படம் ஜூன்-3ஆம் தேதியும் வெளியாக இருக்கின்றன,
துறமுகம் படம் 1940களில் நடைபெறும் கதையாக, துறைமுக தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குட்டாவும் சிக்ஷையும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லாராக உருவாகியுள்ளது.