ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அகண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்த்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி, ஹனி ரோஸ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
50 சதவிவித படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. என்பிகே 107 என்கிற தற்காலிக தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாரு என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெய் பாலையா என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவை ஜெய் பாலைய்யா என்று அன்போடு அழைப்பார்கள். அதையே படத்திற்கு தலைப்பாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.