ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகை கட்டா மைதிலி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து நான் தற்கொலை செய்ய போகிறேன், என்று போலீசாருக்கே போன் செய்து கூறிவிட்டு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், போன் சிக்னலை வைத்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.