தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பதித்த நாளில் இருந்தே அனிருத்துக்கும், இயக்குனருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அனிருத் இயக்குனருடன் கோபித்துக் கொண்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
அனிருத் தனக்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தாக கூறப்படுகிறது. கன்னட சின்னத்திரையில் வெளிப்புற படப்பிடிப்பில் நடிகைகள் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனிருத் கேரவன் கேட்டது பிரச்சினை ஆனது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு 2 ஆண்டுகள் தொடரில் நடிக்க தடை விதித்தது. இதனால் தற்போது நடித்து வரும் அனைத்து தொடர்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கன்னட சின்னத்திரையில் ஒரு நடிகருக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.