பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் |
பார்ட்-2 ஜுரம் தற்போது தென்னிந்திய சினிமாவை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது. சமீபத்தில் கேஜிஎப்-2 படம் ஹிட்டடிக்க, அடுத்தததாக புஷ்பா-2, இந்தியன்-2 ஆகிய படங்கள் களத்தில் இருக்கின்றன. ஜீவி-2 என்கிற படம் கூட சத்தமில்லாமல் ஒடிடியில் ரிலீஸாகி விட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றதில் துல்கரின் மார்க்கெட் வேல்யூ நன்றாகவே உயர்ந்துள்ளது.
கடந்த 2014ல் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'விக்ரமாதித்யன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிளான் செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குனரான லால்ஜோஸ். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரே இப்படி ஒரு பேச்சு எழுந்து அது அப்படியே அமுங்கி விட்டது. இந்தநிலையில் தமிழ், மலையாளம், தற்போது தெலுங்கு என ஹிட் கொடுத்து துல்கர் சல்மான் வெற்றிமுகம் காட்டி வருவதால் இப்போது விக்ரமாதித்யன் பார்ட்-2 எடுத்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறாராம் இயக்குனர் லால்ஜோஸ்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பாசிடிவான பதிலை கூறியுள்ளார் லால்ஜோஸ். முதல் பாகத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்த உன்னிமுகுந்தன், கெஸ்ட் ரோலில் நடித்திருந்த நிவின்பாலி ஆகியோரையும் இந்தப்படத்திலும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளாராம் லால்ஜோஸ்.