பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மின்னல் முரளி. டொவினோ தாமஸ் மற்றும் தமிழ் நடிகர் குருசோமசுந்தரம் இருவருமே இந்த படத்தில் சூப்பர்மேன் பவர்கொண்ட ஹீரோ மற்றும் வில்லன் என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்திற்கு ஜஸ்டின் மேத்யூ என்பவர் இன்னொரு கதாசிரியருடன் இணைந்து கதை எழுதியிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் எழுதிய கதையை பிரபல பாலிவுட் இயக்குநரும். தயாரிப்பாளருமான அஸ்வினி ஐயர் திவாரி தயாரிக்கிறார்..
2016-ல் அமலாபால் நடிப்பில் தமிழில் வெளியான அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் தான் அஸ்வினி ஐயர் திவாரி. இந்த படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் இவர், தனது அம்மா தான் வளர்ந்து வந்த காலகட்டத்திலே மலையாள படங்களை பார்க்க தன்னை உற்சாகப்படுத்தினார் என்றும் அதைத் தொடர்ந்து தான் தற்போது மலையாளத்தில் படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.