ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையலகத்தில் சீனியர் ஹீரோவான கிருஷ்ணம் ராஜு நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். 'பாகுபலி' நடிகர் பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவுக்கு தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்தனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கு ஹீரோக்கள் நேரில் சென்று மறைந்த கிருஷ்ணம் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணம் ராஜுவுக்கு சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். சக சீனியர் நடிகர், சக நடிகரின் நெருங்கிய உறவினர் என்று இருந்தும் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் காலை 9.20 மணியளவில் 'சைமா 2022' விருதுகளை வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தால் அல்லு அர்ஜுன். அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் அவரை 'டிரோல்' செய்தனர்.
எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த பிறகு மதியம் 2 மணி அளவில்தான் கிருஷ்ணம் ராஜுவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டார் அல்லு அர்ஜுன். அவரது இந்த செயல் பிரபாஸ் ரசிகர்களிடமும், கிருஷ்ணம் ராஜு ரசிகர்களிடமும் பொதுவான திரையுலக ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.