டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜூன், தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார். இதையடுத்து ஐதராபாத் திரும்பியதும் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்கப்போகிறார்.