ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாத் பாஷி. இவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள சட்டம்பி என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவரைப் பேட்டி கண்ட தொகுப்பாளினி அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாக ஸ்ரீநாத் பாஷி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‛பேட்டியின்போது தன்னை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி கேள்விகளை கேட்டதாகவும் அதனால் தான் ஒரு கட்டத்தில் கோபத்துடன் பேச நேர்ந்ததாகவும்' கூறியுள்ளார். அது மட்டுமல்ல இன்னொரு சேனலிலும் இவர் பேட்டியின்போது அங்கிருந்து தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ கிளிப் ஒன்றும் வெளியாகி இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.