'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாத் பாஷி. இவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள சட்டம்பி என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவரைப் பேட்டி கண்ட தொகுப்பாளினி அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாக ஸ்ரீநாத் பாஷி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‛பேட்டியின்போது தன்னை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி கேள்விகளை கேட்டதாகவும் அதனால் தான் ஒரு கட்டத்தில் கோபத்துடன் பேச நேர்ந்ததாகவும்' கூறியுள்ளார். அது மட்டுமல்ல இன்னொரு சேனலிலும் இவர் பேட்டியின்போது அங்கிருந்து தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ கிளிப் ஒன்றும் வெளியாகி இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.