ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா. பிரபாஸை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. கிருஷ்ணம் ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பிரபாஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தனது பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாகவும், முதல் கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகையும், ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சிதுறை வாரிய தலைவருமான ரோஜாவும் கலந்து கொண்டார். அவர், கிருஷ்ணம் ராஜு பிறந்த இந்த ஊரில் அரசு அவருக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யும், இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரபாஸ் ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்தார். பிரபாஸ் சொந்த கிராமத்திற்கு வந்ததை அறிந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினார்கள். வீட்டின் பால்கனியில் நின்று அவர் ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டார்.