ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதன்பிறகு வெளிபாடின்டெ புஸ்தகம், மதுர ராஜா, ஐயப்பனும் கோஷியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களால் அன்னா சிறை வைக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக நேற்று கொச்சி ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்று உள்ளார் அன்னா. புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் ஊழியருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மற்ற ஊழியர்கள் சேர்ந்து நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னாவை சிறை வைத்தனர். உடனே தன்னிடமிருந்த செல்போன் மூலம் நண்பர்களை அழைத்துள்ளார் அன்னா. நண்பர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அன்னா புகாரை வாபஸ் பெற்றார்.