பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 200 கோடியை தாண்டி வசூலையும் வாரிகுவித்து வருகிறது. நடிகர் ரஜினி படத்தை பார்த்துவிட்டு இந்தியாவின் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் பேரில் 'காந்தாரா' திரையிடப்பட்டது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட பதிவில் "கந்தாரா திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா ஈஷாவில் திரையிடப்படும் இரண்டாவது படம். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு கங்கனா நடித்திருந்த மணிகர்னிகா படம் திரையிடப்பட்டது. இந்த படம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை கதை.