தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன்பிறகு தனுஷுடன் ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்தார். இருந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் சமுத்திர குமாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் முழுவதும் இவரது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க மலையாளத்திளும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வரும் இவர், இன்னொருபக்கம் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
தான் சிறுவயதிலிருந்தே மம்முட்டி ரசிகை என கூறி வரும் ஐஸ்வர்ய லட்சுமி, அவருடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அதேசமயத்தில் அவரது மகன் துல்கர் சல்மான் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருவது எதிர்பாராத ஒன்று என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.