வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மலையாள திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிப்பதுடன் விநியோகமும் செய்து வருகிறார் பிருத்விராஜ். இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளராக கருதப்படும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த ரெய்டு வெள்ளி அதிகாலை4.30 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக இருக்கும் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.




