பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சில படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டி நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இவர் இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
குஸ்தியை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ராஜஸ்தான் பகுதியில் தான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மராத்தி நடிகை சோனாலி , மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள சோனாலி, ‛‛மோகன்லால் போன்ற ஒரு லெஜன்ட் நடிகருடன் நடிப்பதுடன் எனது புதுவருடம் சூப்பராக ஆரம்பித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனாலி தற்போது மராத்தியில் நடித்துள்ள விக்டோரியா என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.