இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெளிநாடுகளில் புகழ்பெற்று, முதல் முதலாக இங்கே ஹிந்தியில் துவங்கப்பட்டு வரவேற்பை பெற்ற பிக்பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோ, பின்னர் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் தொகுத்து வழங்க மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் நான்கு சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதேசமயம் கடந்த நான்காவது சீசனில் மோகன்லால் தொகுத்து வழங்குவது பற்றி நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக அவர் போட்டியாளர்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று அதிகம் சொல்லப்பட்டு வந்தது. மேலும் இதற்கு மிக சரியான நபராக ஆக்சன் கிங் என அழைக்கப்படும் சுரேஷ்கோபி தான் பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர்.
இதனால் இந்த பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளரில் மாற்றம் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த கட்டமாக இந்த புதிய சீசனுக்காக வெளியாக இருக்கும் புரோமோவுக்கான படப்பிடிப்பில் தற்போது மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த சீசன் எப்போது இருந்து துவங்கும் என்பது குறித்த இந்த புரோமோ விரைவில் வெளியாகும் என தெரிகிறது.