இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரது 28வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் சம்யுக்தா இருவரும் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து ஜெயராம் கூறும்போது, “மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது மகேஷ்பாபு உடனேயே இணைந்து பணியாற்றி வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, என்னுடைய நெருங்கிய நண்பரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் ஜெயராம்.
தமிழ், மலையாளம் என்கிற அளவிலேயே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பயணித்து வந்த நடிகர் ஜெயராம், 2018ல் அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்தின் மூலம் தெலுங்கு திரையரங்கில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து அங்கே இளம் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரிடம் இணைந்து நடித்த ஜெயராம் தற்போது ராம்சரண், ரவிதேஜா ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.