2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்திருந்த வாத்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். மாணவர்கள் ஆசிரியர் பின்புலத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழில் டீசன்டான வெற்றியும், தெலுங்கில் ஓரளவு நல்ல வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி குறித்தும் படம் குறித்தும் இயக்குனர் வெங்கி அட்லூரி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
வாத்தி படத்தை முடித்துவிட்டு மீண்டும் தெலுங்கில் நுழைவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதேபோல சீதாராமம் படத்திற்கு பிறகு தெலுங்கில் ஒரு நல்ல படத்தில் நடிப்பதற்காக துல்கர் சல்மானும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் என்னுடைய படத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துல்கர் சல்மானை பொறுத்தவரை அவர் தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் ஏற்கனவே பிரபலமானவர். அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையும் வட இந்தியாவுடன் தொடர்புடையது என்பதால் இதை ஒரு பான் இந்தியா படம் என்று கூட சொல்லலாம்” என்று கூறியுள்ளார் வெங்கி அட்லூரி.