துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் லீம்குமார். இடையில் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், பின்னர் முன்பு போல மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனராக மாறி ஒரு படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் சலீம் குமாரின் வாழ்க்கை வரலாறு 'ஈஸ்வரா வழக்கில்லல்லோ' என்கிற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சலீம்குமாரின் சொந்த ஊரான வட பரவூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் குஞ்சாகோ போபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார். நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். இந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள அதே தலைப்பில் சலீம்குமார் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்த படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் கூறிய ரமேஷ் பிஷரோடி, அதன் பிறகு சலீம்குமாரின் உடல்நிலை காரணமாக தாங்கள் எல்லாம் சேர்ந்து அவரை படம் இயக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறினார். அதனால் அந்த படத்திற்கான தலைப்பையே இந்த புத்தகத்திற்கு வைத்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவலை அவர் தெரிவித்தார்..