இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதற்கேற்றபடி போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை, திரையுலகில் உள்ள பல பிரபல நட்சத்திரங்களின் மீதும் சந்தேகப் பார்வை வீசி வருவதுடன் அவர்களை அவ்வப்போது அழைத்து விசாரித்தும் வருகிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகை சேர்ந்த விநியோகஸ்தரான கே.பி சவுத்ரி என்பவரை போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி சைபராபாத் போலீசார் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தெலுங்கில் வெளியிட்ட விநியோகஸ்தர் தான் இந்த கே.பி சவுத்ரி. அதன் பிறகு சர்தார் கபார் சிங், அதர்வா நடித்த கணிதன் உள்ளிட்ட படங்களை தெலுங்கில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராஜேந்தர் நகர் அருகில் உள்ள கிஸ்மத்பூர் என்கிற இடத்தில் உள்ள அவரது வீட்டை விட்டு அவர் புறப்படும் போது அவரது காரை மறித்த போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கிராம் அளவு கொண்ட 90 கோகைன் பாக்கெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவாவில் இருந்து அவர் நூறு பாக்கெட்டுகள் வாங்கியதாகவும் மீதி 10 பாக்கெட்டுகளை யார் யாருக்கு அவர் விநியோகம் செய்தார் என்பது குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனராம். தெலுங்கு பட விநியோகஸ்தர் ஒருவர் இப்படி போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.