விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் இயக்குனராகவும் ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்கிற படத்தின் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் இயக்குனர் பஷில் ஜோசப். இவர் முதன்முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படம் குஞ்சி ராமாயணம். இந்த படத்திற்கு கதை எழுதியவர் கதாசிரியர் தீபு பிரதீப். இந்த நிலையில் தீபு பிரதீப் கதையில் தற்போது உருவாகியுள்ள படம் பத்மினி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். குஞ்சி ராமாயணம் படம் போல இதுவும் இன்னொரு கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.