ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தவர், யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக ரொம்பவே தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராம் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ராமச்சந்திரா பாஸ் அன் கோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இது அவரது 42 வது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தாலும் கூட இதற்கு அடுத்ததாக நிவின்பாலியின் 44வது படத்தை இயக்க உள்ள இயக்குனரின் பெயர் தான் ரசிகர்களை அதைவிட ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்த படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான 'ஆர்யன் ரமணி கிரிஜா வல்லபன்' என்பவர்தான். கிட்டத்தட்ட கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் பட பாணியில் இருக்கிறது இவரது பெயர். இதற்கு முன்னதாக 'பர்ன் தி பேபி' என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.