திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மலையாள திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் நேற்று முன் தினம் தனது காரில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இப்போது எதிரே இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இளைஞருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் எதுவும் இன்றி தப்பிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மருத்துவமனைக்கு உடன் சென்று அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுராஜ் வெஞ்சாரமூடு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.