அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
மம்முட்டி நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களில் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்த படம் உருவாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்.
அப்படி அந்த குற்றவாளியை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்கள் முகாமிட்டிருக்கும் போது திக்ரி என்கிற கிராமத்தில் உள்ள சிலர் மம்முட்டி உள்ளிட்ட குழுவினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவார்கள். அப்படி தாக்கும் அந்த கூட்டத்தில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சியில் நடித்ததின் மூலம் குறிப்பாக மம்முட்டியுடன் தாக்குதல் நடத்தியதன் வாயிலாக பிரபலமாகியுள்ளார் நடிகை கேத்தரின் மரியா என்பவர்.
இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒரு கதாநாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை தெரிந்த பெண் வேண்டும் என படக்குழுவினர் ஆடிஷன் வைத்தபோது அதில் தேர்வானார் கேத்தரின் மரியா. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியபோது அவர் வட மாநில பெண் போல மேக்கப் போட்டிருந்ததால் நடிகர் மம்முட்டியே, அவரை வட மாநில பெண் என்றே நினைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் அவர் மலையாளி என தெரியவர ஆச்சரியப்பட்டாராம் மம்முட்டி.