2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷன். அதே சமயம் எந்த சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத மனிதர். பத்திரிகையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக மீடியாக்கள் இவர் மீது விதித்திருந்த இரண்டு வருட தடை சமீபத்தில் தான் நீங்கியது. இந்த நிலையில் அவரே எதிர்பாராத விதமாக தற்போது வேறு ஒரு சிக்கலில் சிக்கியுள்ளதுடன் அவர் மீது போலீசார் எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.
விஷயம் இதுதான். தர்ஷன் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள பக்கத்து வீட்டிற்கு அமிதா ஜிண்டால் என்கிற பெண்மணி வருகை தந்துள்ளார். அவர் இரண்டு வீட்டிற்கும் வெளியே நடுவில் உள்ள காலி இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு தனது நண்பர் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் திரும்பி வந்த போது காரின் அருகில் மூன்று நாய்கள் நின்றிருப்பதையும், அதை பிடித்துக் கொண்டு நாயின் பாதுகாவலர் ஒருவர் நிற்பதையும் கவனித்துள்ளார். அதேசமயம் அந்த நாய்களில் ஒன்று சங்கிலியால் கட்டப்படாமல் இருந்தது. அந்த பெண் காரில் ஏற முயற்சிக்கும் சமயத்தில் நாய்களில் ஒன்று எதிர்பாராத விதமாக அவரது வயிற்றில் கடித்து காயப்படுத்தி விட்டது.
இதனை தொடர்ந்து நாய் பராமரிப்பாளர் மற்றும் நாயின் உரிமையாளரான நடிகர் தர்ஷன் ஆகியோர் மீது பெங்களூரு ஆர்ஆர் போலீஸ் ஸ்டேஷனில் இவர் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. காரில் அமிதா ஜிண்டால் ஏறுவதற்கு முன்பாக காரை அங்கே நிறுத்தியது குறித்து நாய்கள் பராமரிப்பாளருடன் சர்ச்சை ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் சங்கிலியால் கட்டப்படாமல் இருந்த நாய் தன் மீது தாவ முயற்சித்ததை பார்த்தும் கூட, வேண்டுமென்றே அதை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார் அந்த பெண்.